Articles liés à பவழமல்லி

9798893227031: பவழமல்லி

Synopsis

யக்ஞம்' குறுநாவல் பற்றி இலக்கியவாதி நகுலனின் பாராட்டு: (கணையாழி, ஜூலை 1984). இந்த நாவல் பற்றி யாரும் குறிப்பிடாமல் இருந்து விடக்கூடாது, இது கவனத்துக்கு வரவேண்டிய நாவல் என்பதற்கே இதை எழுதுகிறேன். தகவல்களை - தகவல்கள் என்ற தன்மையிலேயே கொடுத்துவிட்டு (இங்கு நான் அசோகமித்திரனின் பாதிப்பைக் காண்கிறேன்) அதிலிருந்து ஒரு மேல் அல்லது அடித்தளத்திற்கு நாவல் செல்கிறது. இது நவீன இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாகக் காணப்படுகிறது. 'யக்ஞம்' என்ற தலைப்பும், கிச்சாவின் 'இந்தக் கிளாசில் பாதிப் பேருக்கு மேல் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாக இருப்பார்களென்று அவனுக்குத் தோன்றியது' என்ற வாக்கியமும் இதைச் சாத்தியமாகச் செய்கின்றது. ஒரு முழுக் கட்டுரை எழுதப்படும் அளவுக்கு இந்த நாவலின் சிறப்பு அமைந்திருக்கிறது.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.